வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நாம் சந்திக்கும் தோல்விகளும், இழப்புகளும் சில நேரங்களில் நம்மை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளாக மாறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு துயரமான சூழலில் இருந்து மீண்டு, கடின உழைப்பால் இன்று சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதித்துக் காட்டியுள்ள ஒருவரின் ஊக்கமளிக்கும் வெற்றிப் பயணம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
குடும்பத்தில் ஒரு முக்கிய நபர் திடீரெனத் தனது வேலையை இழந்ததால், அந்தக்குடும்பம் அடுத்தடுத்து பல பொருளாதாரச் சிக்கல்களையும் கடுமையான சவால்களையும் சந்திக்க நேரிட்டது. வாழ்வாதாரத்திற்கே வழியில்லாத அந்த இக்கட்டான தருடத்தில், மனம் தளராமல் புதிய வழியைத் தேடத் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக, வங்கியில் சிறிய அளவில் கடன் பெற்று ஆன்லைன் வர்த்தகமான ஈ-காமர்ஸ் தொழிலில் அடியெடுத்து வைத்தனர்.
புதிதாகத் தொழில் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் போதிய ஆர்டர்கள் இன்றி, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பெரும் சிரமங்களைச் சந்தித்தனர். இருப்பினும், விடாமுயற்சியுடன் தரமான சேவையை வழங்கியதால், நாளுக்கு நாள் ஆர்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது இந்த ஈ-காமர்ஸ் பிசினஸ் மூலம் மாதந்தோறும் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுவதாகவும், இதன் மூலம் 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் ஈட்டி வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
வழக்கமான ஒரு வேலைக்குச் சென்று பல ஆண்டுகள் உழைத்தும் சம்பாதிக்க முடியாத தொகையை, இவர்கள் இந்த ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஒரே மாதத்தில் ஈட்டியுள்ளனர். “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்ற முதுமொழிக்கு ஏற்ப, அன்று அந்த நபர் வேலையை மட்டும் இழக்காமல் இருந்திருந்தால், இன்று இந்தத் தொழிலைத் தொடங்கி இருக்க முடியாது; இவ்வளவு பெரிய லாபத்தையும் பார்த்திருக்க முடியாது.
A family member loses their job for some reason, causing them to face many problems!
After this, they took a loan from the bank and started an e-commerce business. Initially, they didn’t receive many orders.
Then, gradually, orders started coming in, and now they sell 10 to 15… pic.twitter.com/YuYk680rWC
— Mahi Mishra (@MahiMishra98) August 26, 2026
“>
இந்த வெற்றிக் கதை, வேலையை இழந்து தவிப்பவர்களுக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது. வாழ்க்கையில் இடர்கள் வரும்போது முடங்கிவிடாமல், புதிய வாய்ப்புகளைத் தேடினால் வெற்றியைக் குவிக்கலாம் என்பதை இவர்களின் பயணம் உணர்த்துகிறது.
