இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் AI மூலம் பல துறைகள் பல வளர்ச்சி அடைந்துள்ளன. முதலில் பொழுது போக்காக பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் தற்போது எந்திரவியல் மற்றும் சாப்ட்வேர் என பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசிய கீதம் பாடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆட்சி அசலாக நம்முடைய கண் முன்பு வந்து செல்கிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.