வெள்ள நிவாரணம் ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் பணம் விநியோகிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிவாரண பணம் ரூ. 100, ரூ.200 நோட்டுகளாக அல்லாமல், ரூ. 500 நோட்டுகளாக 12 (ரூ.6000) வழங்கப்பட உள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ரேஷன் கடையில் விண்ணப்பத்தை பெற்று வங்கிக் கணக்கு விவரம். வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள்.