தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மிக குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளை கண்டறிவதற்கு அயராது உழைத்த அனைவரையும் இந்த தருணத்தில் பாராட்டு மகிழ்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள twitter பதிவில் , இந்த திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலை கடை பணியாளர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், அனைத்து அரசு துறை அலுவலர்களையும் இந்த திட்ட நிகழ்வின்  வெற்றியில்  பாராட்டி மகிழ்கிறேன் அனைத்து உயர் அலுவலகங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.