வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் புத்தகம் ஒன்றை  எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பெங்களூர் முதன்மை அமர்வு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது  வக்கீல் நடேசன் வாதிட்டபோது புத்தக  வெளியீட்டுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து வக்கீலின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீனிவாசன் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.