தமிழகத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் நாடுதான் தமிழ்நாடு என்று அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், என்னை போன்றவர்கள் அமைச்சர்கள் என்றாலும் அது வீட்டு வாசல் வரை தான். அதற்கு அப்புறம் பதவி வீட்டுக்கார அம்மாவிடம் போய்விடும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கினால் அது பாதுகாப்பாக இருக்கும். எங்களிடம் தந்தால் அது எங்கு போகும் என்று எல்லோருக்கும் தெரியும் என கலகலப்பாக பேசினார்.