
தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக சிறுத்தை, யானைகள் போன்ற காட்டு விலங்குகள் சாலையை கடப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் என்பது சற்று அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடும் சிசிடிவி காட்சி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு வீட்டின் தடுப்பு சுவரில் கோழி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த சிறுத்தை கோழியை பிடிப்பதற்காக சுவரில் ஏறி ஒரே ஜம்ப்பில் அதை கவ்வி பிடித்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Tamil Nadu: A leopard caught jumping and catching a hen on camera, in Coimbatore. pic.twitter.com/ZigYG6NxhJ
— ANI (@ANI) May 30, 2024