முன்னணி நடிகை சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்த போது நாகசைத்தன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் சமந்தாவின் கரியர் உச்சத்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு மயோசிட்டிஸ் எனும் நோய் தாக்கியது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒரு வழியாக தற்போது மீண்டு வந்து நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் சமந்தாவின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சமந்தா தனிமையில் சிங்கிளாக இருந்தது போதும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவருடைய வீட்டில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி தங்களுடைய உறவுக்கார பையன் ஒருவரே மாப்பிள்ளையாக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.