தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை பரமசிவன் டீ குடிப்பதற்காக வெளியே கடைக்கு சென்று விட்டார். இவர்களது இரு மகன்களும் இரவு கபடி போட்டியை பார்த்துவிட்டு வீட்டின் மேல் மாடியில் தூங்கிய நிலையில் உமா மட்டும் கீழே தூங்கியுள்ளார்.

இதில் உமா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து கத்தியால் உமாவை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். வெளியே சென்ற பரமசிவன் வீட்டிற்கு வந்தபோது தன் மனைவி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளி யார் என்பதையும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.