சென்னையில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வை நவம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கிணறு, குடிநீர் தொட்டி மற்றும் சுற்றுச்சூழல் காண அனுமதி கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.