கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் அபிஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாடகை வீட்டில் குடியிருந்து படித்து வருகிறார். அபிஜித்தும் 19 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் அபிஜித் தனது காதலிக்க வீடியோ கால் செய்து கொண்டே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிஜத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.