அபாயகரமான ரஸ்ஸல்ஸ் வைபர் பாம்புடன் பெண் ஒருவர் நடத்திய செயலால் சமூக ஊடகங்களில் பரபரப்பு நிலவுகிறது. விஷம் மிகுந்த இந்த பாம்பின் தாக்குதல் காணொளி சமூக ஊடக தளமான X-இல் வைரலாகி வருகிறது.
ஷகுப்தா கான் என்ற நபர் பகிர்ந்த இந்த வீடியோவில், பெண் ஒருவர் ரஸ்ஸல்ஸ் வைபர் பாம்பின் கூண்டைத் திறந்து அதில் ஒரு செல்லப் பூனையை வைப்பது போல காட்டப்படுகிறது. இதனால் பாம்பு கடும் கோபமடைந்து சிவப்பாக மாறுவதையும், பின்னர் திடீரென பறந்து சென்று அந்தப் பெண்ணின் கழுத்தில் பாய்ந்து ஒட்டிக் கொள்பதையும் காணலாம்.
தாக்குதலால் பெண் பதற்றத்துடன் பாம்பை கீழே தள்ளி விடுகிறார். அதிர்ஷ்டவசமாக, பாம்பு அவரை கடிக்கவில்லை. ரஸ்ஸல்ஸ் வைபர் பாம்பின் ஒரு கடியே உயிருக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஆபத்தான பாம்புடன் அந்தப் பெண் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது தெளிவாக தெரியவில்லை.
जब आप दरवाज़ा खोलते हैं, और आपका पालतू जानवर कहता है ‘आज आज़ादी का दिन है।’ 😂 pic.twitter.com/P3fETaRnV9
— Shagufta khan (@Digital_khan01) December 3, 2025
இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இருந்தாலும், டிசம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றப்பட்ட இப்படியொரு அபாயகரமான காட்சி ஏற்கனவே 24,000-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
வீடியோவை பார்த்த இணைய பயனர்கள் வியப்பும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். ஒருவர், “நான் பாம்புடன் நட்பு கொள்ள நினைத்தேன்; அதனால்தான் அதை கட்டிப்பிடித்தேன்,” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மற்றொருவர், “எனது சுதந்திரம் போய்விட்டது,” என கருத்து பதிவிட்டார். இன்னொருவர், “நீங்கள் விதைத்ததையே அறுவடை செய்வீர்கள்,” என எச்சரிக்கைபோல குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
