தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும் அரசியல் தலைவருமான விஜய்யின் மனைவியான சங்கீதா, தங்களது குடும்ப வாழ்க்கை விவகாரம் தொடர்பாகச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து கோரும் மனுவை முற்றிலும் திரும்பப் பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வகையான வதிகளும் ஊகங்களும் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், தற்போது வந்துள்ள இந்தத் திடீர் திருப்பம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை மனுதாரரான சங்கீதா தாமாக முன்வந்து திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து, இது தொடர்பான வழக்கு நடவடிக்கைகளைச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இவர்களின் விவகாரத்து தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் சட்டப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தகவல் சினிமா வட்டாரங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
தளபதி விஜய் மற்றும் சங்கீதா குறித்த இந்த லேட்டஸ்ட் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே இது மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்தச் செய்தியால், நீண்ட நாட்களாக நிலவி வந்த வதிகளுக்குத் தற்போது முற்றுப்புள்ளி விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
