
ஆந்திர மாநிலம் ராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலிமா. இவருக்கு 26 வயது ஆகிறது இவர் விவாகரத்து. இவர் விவாகரத்து பெற்ற ஆண்கள், குடும்ப பிரச்சனையால் மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழும் ஆண்களை அடையாளம் கண்டு நெருக்கமாக பழகியுள்ளார்.
அதன் பிறகு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நடித்து காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தைகள் கூறி நீலிமா லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றி விடுவாராம்.
இதற்கு நீலிமாவின் பெற்றோர் ராமகிருஷ்ணா, வீரலட்சுமி, அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாண் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். கடந்து சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் நீலிமா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நீலிமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் ஜாமீனில் வெளியே வந்த நீலிமா வழக்கம் போல பலரிடம் கைவரிசை காட்டி வந்தார். இவர் 12க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகையை வாங்கி உள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் நீலிமா மற்றும் அவரது பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.