தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விருப்பமுள்ள சேலம் மாவட்ட விவசாயிகள் தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம் என்று மின்வாரிய மேற்பார்வை அதிகாரி அறிவித்துள்ளார்.