பஞ்சாப் மாநிலத்தில் கரும்பு கொள்முதலுக்கு அரசு குவிண்டாலுக்கு 450 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் பஞ்சாப் முதல்வர் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார். அதன்படி கரும்பு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 11 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், அதன் காரணமாக 380 ரூபாயிலிருந்து 391 ரூபாயாக கரும்பு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த விலை தான் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.