சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடிக்கடி தன்னுடைய மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் தின விழாவில் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டு தன்னுடைய மகன்கள் வெற்றி பெற்றதை ஐஸ்வர்யா தன் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு கோப்பை வென்றுள்ளனர். இந்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்து, எந்த சூரியனும் இந்த குழந்தைகளின் உற்சாகத்தை நிறுத்த முடியாது. காலை ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் ஓடுகிறார்கள். என் மகன்களின் பிரகாசத்தை கண்டு நான் புன்னகைத்தபடி நின்று கொண்டிருக்கிறேன் என்று பகிர்ந்துள்ளார்.