தெலுங்கானா மாநிலத்தில் விளையாடிவிட்டு தூங்கச் சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு ஏற்பட்டு சமீப காலமாக உயிரிழப்பு சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் உள்ள மரிபேடா மண்டல்என்ற பகுதியில் அதிகாலையில் 13 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஸ்ரவந்தி என்ற 13 வயது சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்த வியாழக்கிழமை அன்று இரவு விளையாடிவிட்டு இயல்பாக சென்றுள்ளார். அதன் பிறகு அவருக்கு இரவு 12:30 மணி அளவில் இதயத்தில் வலி ஏற்பட்டதுடன் கடுமையான சுவாச பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அதற்கு முன்பே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.