நாட்டில் உள்ள மொபைல் பயனர்களுக்கு பிரத்யேக அடையாள எண்ணை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. சிம் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த அடையாள எண் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் அக்கவுண்ட் போன்ற மொபைல் பயனர்களுக்கு இந்த தனித்துவமான எண் ஒதுக்கப்படும்.

பயனரின் மொபைல் இணைப்புகள் தொடர்பான விவரங்கள் இந்த ஐடியுடன் இணைக்கப்படும். பயனாளர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் செயலில் உள்ள சிம்களின் விவரங்கள் இணைக்கப்படும்.