சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது.   தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள CM பசவராஜ் பொம்மை, அவர் வெளியேறியதால் கட்சிக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு வரும் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்றார். இந்நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.