சமீபகாலமாகவே வயது வித்தியாசமின்றி  மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, ஆடும் போது, பாடும் போதெல்லாம் மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா எஸ்சி விடுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த கோடீஸ்வாமுலு (13) என்ற மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட கோடீஸ்வாமுலு, தன்னால் மூச்சு விட முடியவில்லை என நண்பர்களிடம் கூறிவிட்டு சரிந்து விழுந்துள்ளார். தொடர்ந்து மாணவனை வார்டன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.