தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி கடந்து சில மாதங்களுக்கு முன்பே விபத்தில் சிக்கினார். இந்த நிலையில் விபத்திலிருந்து தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். முகத்தில் தற்போது கூட ஐந்தாறு பிளேட் உள்ளது.

நான் பேசுவதை நன்றாக கவனித்தால் ஒரு சில வார்த்தைகளை உச்சரிப்பதற்கு சிரமப்படுவதை பார்க்கலாம் என்ற அவர், விபத்தில் ஏற்பட்ட அழுத்தம் குறைந்து தற்போது பாசிட்டிவாக இருப்பதாக கூறினார். மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த போது அவர் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.