செப்டம்பர் 18ஆம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடர் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் மிக முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.