ஒடிசா மாநிலம் கேந்துசர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தங்க விடுதியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விடுதியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த  நான்கு பேரை விஷ பாம்பு கடித்துள்ளது.

இதில் சேஷாஸ்ரி நாயக், எலினா நாயக் என இரண்டு சிறுமிகளும் ராஜா நாயக் என்ற சிறுவனும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்த விட ஆகாஷ் நாயக் எனும் சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.