ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுதி காப்பாளர் கவியரசன்(23) என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கவியரசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.