நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மூத்த பத்திரிகையாளரான கே.ராஜன் பேசுகையில், விஜயிடம் அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய எந்த ஒரு குணமும் இல்லை.

இப்படி எல்லாம் இருந்தால் நடிக்கும் படங்கள் தான் ஹிட் ஆகுமே தவிர அவரால் அரசியலில் இதெல்லாம் வேலைக்கே ஆகாது. எனவே விஜய் ஒரு அரசியல்வாதியாக நல்லா சிரிச்சு பேசணும், அன்பா பேசணும், மக்களோடு நெருங்கி பேசணும். ஏழைகளிடம் இறங்கி பேசணும். இது எதுவுமே விஜய் இடம் கிடையாது. இவரிடம் சினிமா பாப்புலாரிட்டி மட்டும்தான் இருக்கிறது. எனவே இவரோட குணத்தை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு தகுந்தார் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.