தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மறைந்த விஜயகாந்த் உடல் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக தினமும் அவரது ரசிகர்களும் கட்சியினரும் வருகின்றனர். அவர்களின் பசியாற்றுவதற்காக தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.