தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் சென்னை மியாட் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அண்மையில் கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி மருத்துவமனை முன்பு தேமுதிக தொண்டர்கள் பலரும் வந்து செல்வதால் மேலும் தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.