கர்நாடக மாநிலம் கொப்பல் நகரம் பாக்யாநகரில் உள்ள சிறிய குடிசை வீட்டில் வசித்து வருபவர் மூதாட்டி  கிரிஜம்மா (80). இந்த நிலையில் குடிசை வீட்டில் வாழும் இந்த மூதாட்டிக்கு மின் கட்டணம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2 மின்விளக்குகளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தாமல் இருந்தும் இப்படி ஒரு பில் வந்ததால் மூதாட்டி செய்வது அறியாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் மாதந்தோறும் சராசரியாக ரூ.70 முதல் ரூ.80 வரை கட்டணம் செலுத்தி வந்துள்ளார். ஆனால், மீட்டர் ரீடிங்கில் தவறு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.