இன்று தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. பெரியார் உருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.  தனது அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் த.வெ.க தலைவர் விஜய் பதிவிட்டார்.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.