கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதன்பிறகு சிதம்பரம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயபாலன் (40) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 16 வயது சிறுமி சி.சாத்தமங்கலத்தில் உள்ள தன்னுடைய சித்தி வீட்டுக்கு சென்றிருந்தார். இதே பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு விஜயபாலன் சென்று இருந்தார். அப்போது மாணவியை பார்த்த அவர் கட்டாயப்படுத்தி அவரின் சித்தி வீட்டிற்கு பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முயற்சி செய்த நிலையில் சிறுமி கத்தி கூச்சலிடவே உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் விஜயபாலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.