பாஜகவில் இணைந்த 25 ஊழல் குற்றவாளிகள் மீது இருந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிரபல நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதை மேற்கோள் காட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமரை விமர்சித்துள்ளார். தனது ‘X’ பதிவில், “பேசா நா இரண்டுடையாய் போற்றி என அண்ணா கூறியது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து, உத்தமர்கள் ஆக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாக பொருந்தும்” என்று விமர்சித்துள்ளார்.