நேற்று ராஜ்ய சபாவில் 90 வயதிலும் வீல்ச்சேரில் வந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுக்கொண்டார். 

ஆகஸ்ட் 4ஆம் தேதி காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது அதன்படி ஆகஸ்ட் 7 2023 அன்று ராஜ்யசபாவில் மிக முக்கியமான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அதனால் ராஜ்யசபாவில் இருக்கும் அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் சபையில் இருந்து கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 90 வயதிலும் வீல்ச்சேரில் வந்து சபையில் பங்கெடுத்துள்ளார்.