இலங்கை நாட்டில் தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கம் முடிவு எடுத்துள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு அந்நாட்டில் உள்ள சிங்களர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார். அதில் அவர் அந்நாட்டின் வடக்கு பிராந்திய வளர்ச்சி குறித்தும் தமிழர் பிரச்சினையை தீர்வு காண்பது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது “நம் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு சமமாக வடக்கிற்கான முக்கிய வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். இந்த வடக்கு பிராந்தியத்தை முழுவதுமாக போர் சீரழித்து விட்டது. மேலும் அப்பகுதியின் வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு வேண்டும். மேலும் ஒற்றை ஆட்சியின் கொள்கைப்படி வடக்கு பகுதிக்கு அதிகபட்ச அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.