இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி கணக்கு மூலம் பணத்தை டெபாசிட் செய்யவும் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளவும் முடியும். சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றையும் வங்கிகளில் செய்யலாம். நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகியுள்ள நிலையில் எந்த பொருள் வாங்கினாலும் கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்துகிறோம். ஆனால் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எல்லை உள்ளது.

அதைவிட அதிக அளவில் பணம் வங்கி கணக்கில் இருந்தால் வருமான வரி செலுத்துவது கட்டாயமாகும். வருமான வரி சட்டத்தின்படி அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் பெரிய பண டெபாசிட்டுகள் குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வருமானவரித்துறை உத்தரவின்படி ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.