ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். நேற்று லெபனான் நாட்டின் எல்லையில் ஒட்டி இருந்த இஸ்ரேலிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

இதில் ஏராளமான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இது பற்றி இஸ்ரேல் ராணுவ தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இவ்வாறாக லெபனான் இஸ்ரேல் எல்லையில் பதட்டம் நீடித்து வருவதால் அமெரிக்க மக்கள் யாரும் லெபனானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.