தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளியாகிய வாரிசு படத்தை அடுத்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வருவதால் விரைவில் இருள் சூழ்ந்து விடுகிறது.

இதன் காரணமாக படப்பிடிப்புகளை நடத்துவதில் சிரமம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகளை அதிகாலை 8 மணிக்கு துவங்க படக்குழு திட்டமிட்டு, இதுபற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தியது. மறுநாள் தளபதி விஜய் 7:15 மணிக்கு சூட்டிங் ஸ்பாட் வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து உள்ளார். இவ்வாறு தளபதி விஜய்யின் டெடிகேஷனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.