எச்டிஎப்சி வங்கி தனது முதல் கிளையை லட்சத்தீவில் உள்ள கவரட்டி தீவில் திறந்து உள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் வங்கிக் கிளையை திறந்த முதல் தனியார் வங்கி இதுவாகும். மாலத்தீவுடா சர்ச்சையை தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலா தலமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இப்படியான நேரத்தில் எச்டிஎப்சி வங்கி தனது கிளையை திறந்து உள்ளது.