
தமிழகத்தில் மே மற்றும் ஜூன் மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயிலானது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாத ஒதுக்கீடான 1,89,89,000 கிலோவில் 1,37,79,000 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவையும் விரைவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.