ரேஷன் அட்டை கிடைக்காதவர்களுக்கும் நிவாரண தொகை ரூ 6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து, கிடைக்கப்பெறாதவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.