தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களுக்கு பல வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து பொருட்களையும் ஒரே நாளில் தர அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரேஷன் பொருட்களை குறிப்பாக ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தற்போது புதிய புகார் என்னை அறிவித்துள்ளது. அதாவது 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அது மட்டுமல்லாமல் ஒரே தவணையில் உணவு வழங்க பலமுறை அறிவுறுத்தியும் அதனை பின்பற்றாத ஊழியர்கள் மீது இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.