கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.