மேற்கு வங்காளத்தில் உள்ள பர்கானா மாவட்டத்தை சேர்ந்து தம்பதி ஜெயதேவ் – சதி. இந்த தம்பதி மிகவும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திடீரென இவர்கள் புதிய iphone ஒன்று வாங்கியுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கவனித்து விட்டு சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கண்ட போது அவர்கள் தங்களது குழந்தையை விற்பனை செய்து அந்த பணத்தின் மூலம் iphone வாங்கியதையும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கு சென்று ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் தாய் சதி மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய பெண் பிரியங்கா ஆகிய இருவரை கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை தேடி வருகின்றனர்.