கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 52 கணக்கு அலுவலர் நிலை 3, கணக்கு அலுவலர், மேலாளர் நிலை 111, முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. எழுத்து தேர்வுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். சம்பளம் 60 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 8ம் தேதிக்குள் www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.