இந்தியாவில் தற்போது வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்கள் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. உங்களுடைய முதலீட்டிற்கு ஏற்றவாறு வட்டி விகிதங்களும் வழங்கப்படுகிறது. அதில் பெரும்பாலான மக்கள் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இவர்களுக்கு ஏற்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டத்தில் ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பெற முடியும்.

இந்த PPF கணக்கில் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் 15 ஆண்டுகளில் ஒன்பது லட்சம் சேமிக்க முடியும். இதன் வட்டித்தொகை மட்டும் 7. 27 லட்சம் ஆகும். மொத்த முதிர்வு தொகை 16.27 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். திட்டத்தின் முதுகு காலத்தில் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தால் உங்களுக்கு மொத்தம் 12 லட்சம் வரை கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள வங்கி அல்லது அஞ்சலகத்தில் கணக்கை திறந்து பயன்பெறலாம்