
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் நாக்லா புத்தா பகுதியில் உள்ள ஓர் ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பணம் எடுக்க வந்தவர்கள் 500 ரூபாய் டைப் செய்தபோதும் 1100 ரூபாய் வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. தொடக்கத்தில் சிலரை மட்டுமே புரிந்த இந்த தவறான பணவெளியீடு தகவல், விரைவில் பலரிடம் பரவியதால் ஏடிஎம் முன்பு மக்கள் கூட்டம் குவிந்தது.
ஒருவருக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களும் சோதனை செய்யத் தொடங்கினர். ஒரே மாதிரியான நிபந்தனையில் பலருக்கும் 500 ரூபாய் டைப் செய்தபோது 1100 ரூபாய் கிடைத்தது. மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கும் தகவல் கூறினர். பலர் விரைந்து அங்கு சென்று இரட்டிப்பு பணத்தைப் பெற்றனர். இந்த நிதி தவறுகள் ஏற்படும் நிலையில் 50க்கும் மேற்பட்டோர் இதனை பயன்படுத்திக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. இதில் அவர்கள் கணக்கிலிருந்து 500 ரூபாய் மட்டுமே கழிக்கப்பட்டது.
UP : आगरा में ATM पर 500 की जगह 1100 रुपए निकलने पर लग गई लोगों की भीड़
◆ मलपुरा थाना क्षेत्र में स्थित ATM पर आया टेक्निकल फॉल्ट
◆ बैंक को सूचना देकर ATM को कराया गया बंद
Agra ATM | #Agra | #ATM pic.twitter.com/iLyrRYZkXU
— News24 (@news24tvchannel) June 22, 2025
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மல்புரா காவல் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, ஏடிஎத்தை முடக்கியனர். பின்னர் ஒரு இளைஞரிடம் நேரில் பணம் எடுக்கச் செய்து, தவறான வெளியீட்டை உறுதிப்படுத்தினர். இது முற்றிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகின்றன.