
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு வங்கி மோசடி வழக்கு நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு வங்கி ஊழியர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, 41 வாடிக்கையாளர்களின் 110க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.4.58 கோடியை மோசடி செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம், நம் வங்கி கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதுபோன்ற மோசடிகளிலிருந்து தங்களை பாதுகாக்க வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்:
- உங்கள் வங்கி கணக்கிற்கு வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள் (பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்கள், சிறப்பு எழுத்துக்கள்).
- OTP அல்லது Authenticator App மூலம் 2FA (Two Factor Authentication) செயல்படுத்துங்கள்.
- உங்கள் வங்கி கணக்கு அறிக்கைகளை வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் சரிபாருங்கள்.
- உங்கள் மொபைல்/இணைய வங்கி பயன்பாட்டைத் திறந்து வைத்து ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கண்காணியுங்கள்.
- போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்
வங்கி ஒருபோதும் உங்கள் OTP, ATM PIN, Net banking Password போன்றவற்றை கேட்காது. - மோசடி எண்ணிலிருந்து வரும் அழைப்புகள், மின்னஞ்சல்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.
- ஏதேனும் சந்தேகமிருந்தால், உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணை மட்டும் பயன்படுத்தி உறுதி செய்யுங்கள்.
- வங்கியில் பதிவு செய்துள்ள உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை வழக்கமாக புதுப்பித்து வைத்திருங்கள்.
- எண் மாறினால் உடனே வங்கிக்கு தகவல் கொடுத்து புதுப்பிக்க வேண்டும்.
- பாதுகாப்பான இணையம் மூலம் மட்டுமே வங்கி சேவைகள்
பொது வைஃபை (Public Wi-Fi) மூலம் Net banking, Mobile Banking பயன்படுத்தாதீர்கள். - பாதுகாப்பான, தனிப்பட்ட இணைய இணைப்பை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது.
இந்த தகவல்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு செயல்பட்டால், நம் வங்கி கணக்குகளை மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாக்க முடியும். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் இதை அறிந்து செயல்பட வழிகாட்டுங்கள்.