
நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலையானது 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி விலையேற்றம் உள்ள நிலையில், பல வினோதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில், மர்ம நபர்கள் சிலர் டொயோட்டா வாகனத்துடன் தக்காளியை திருடிச் சென்றனர்.
விவசாயி ஒருவர் பொலிரோ வாகனத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 3,750 கிலோ தக்காளியை ஏற்றிக்கொண்டு டிரைவருடன் ஆர்எம்சி யார்டுக்கு வந்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு தேனீர் அருந்தச் சென்ற போது, மர்ம நபர்கள் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த விவசாயி போலீசில் புகார் செய்தார்.