வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. இதனால் இன்று முதல் மக்கள் தங்களது ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளில் கூட்டம் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் புழக்கம் அதிகம் இல்லை என்பதும் தெளிவாகிறது.