புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் பணம் சேருவதை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் மக்கள் தரும் 2,000 நோட்டுகளை கடைகளில் வாங்க வணிகர் பேரமைப்பு அறிவுறுத்துவதாக அதன் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். 2000 நோட்டுகளை செப்.30க்குள் வங்கியில் செலுத்த சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், வங்கியில் செலுத்துவதற்கான அவகாசத்தை டிச.31 வரை நீட்டிக்க வேண்டும். என்றும் ஒருநாளில் வங்கி கணக்கில் 20,000 செலுத்தலாம் என்பதற்கு பதில் 60,000ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.